குருந்தன்கோடு அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

63பார்த்தது
குருந்தன்கோடு அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு
குருந்தன்கோடு அடுத்த மல்லன் கோடு பகுதியை சேர்ந்தவர் சொர்ணப்பன் (67). விவசாயி. சம்பவ தினம்  காலையில் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளார். அப்போது அவரது காலில் ஏதோ விஷப்பாம்பு கடித்ததாக தெரிகிறது.

      இதனால் சொர்ணப்பன் வலியால் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, அவரது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

     அங்கு சிகிச்சை பலனின்றி சொர்ணப்பன் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் கோபு என்பவர் கொடுத்த புகாரின் பேரில்  இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி