குமரியில் கொத்தனாரை கல்லால் தாக்கிய 7 பேர் மீது வழக்கு

2612பார்த்தது
நாகர்கோவில் கோணம் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ரெஜின் (வயது 35), கொத்தனார். இவர் சம்பவத்தன்று ஆயுதப்படை சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் மது வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் புன்னை நகரை சேர்ந்த நவீன்குமார் மற்றும் கீழராமன்புதூரை சேர்ந்த அஜய் கண்ணன் (28) உள்பட 7 பேர் இருந்தனர். அப்போது திடீரென கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயத்தில் ரெஜினை நவீன்குமார் தள்ளியதாக தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், அஜய் கண்ணன் உள்பட 7 பேரும் சேர்ந்து ரெஜினை கல்லால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த ரெஜின் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் நவீன்குமார் உள்பட 7 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொத்தனாரை கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி