இரணியல் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது சிறையில் அடைப்பு

55பார்த்தது
இரணியல் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது சிறையில் அடைப்பு
இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார் இரணியல் மேல்நிலைப் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

   விசாரணையில் அவர்கள் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த குமார் (53) மூலச்சன் விளை ஜான்றோஸ் (43) என்பது தெரிய வந்தது. தொடர்  விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடனே அவர்களை சோதனை செய்தனர்.

      அப்போது அனுமதியின்றி 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் இரண்டு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி