வாவறை கார்மல் மலை அன்னை ஆலயத்தில் தேர்பவனி

52பார்த்தது
நித்திரவிளை அருகே வாவறை தூய கார்மல் மலை அன்னை  குடும்ப விழா கடந்த 12-ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி மற்றும் பல்வேறு கலை நிகழச்சிகள் நடத்தன.  


 9-ம் திருவிழாவான நேற்று மாலை 

அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடந்தது. பவனியானது ஆலயவளாகத்தில் இருந்து புறப்பட்டு எஸ்டி மங்காடு, தபால் நிலையம் வந்த போது 15 வது அன்பியம் சார்பில் வாணவேடிக்கை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடந்து புதுக்கோடு சூசையப்பர் ஆலயம்,
செம்மான்விளை,   ஆதிச்ச விளாகம் வழியாக மீண்டும்  பவனி ஆலயம்  வந்தடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

விழாவின் பத்தாம் நாளான இன்று காலை திருப்பலி, மாலை பொதுக் கூட்டம் போன்றவை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி