நித்திரவிளையில் தாயை குழிக்குள் தள்ளிய மகன் மீது வழக்கு

1878பார்த்தது
நித்திரவிளையில் தாயை குழிக்குள் தள்ளிய மகன் மீது வழக்கு
நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதி சேர்ந்தவர் வள்ளியம்மா (73) இவர் கடந்த 18ஆம் தேதி வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த மகன் லாரன்ஸ் (52) என்பவர் எனது சொத்தில் எப்படி கழிவறை குழி தோண்டலாம் என்று கேட்டு விட்டு மண்வெட்டியால்  குழியை மூட முயன்றுள்ளார். அப்போது வள்ளியம்மா சென்று தடுத்துள்ளார். அப்பொழுது லாரன்ஸ் தாயை பிடித்து தள்ளியபோது வள்ளியம்மா குழிக்குள் விழுதுள்ளார்.

       இந்த சம்பவத்தை பார்த்த லாரன்ஸ் தம்பி மனைவி ஷைனி என்பவர்  வீடியோ எடுத்துள்ளார். இதை கவனித்த லாரன்ஸ், ஷைனியை தாக்கி செல்போனை பறித்து வீசி உள்ளார்.

      குழிக்குள் விழுந்ததில் காயம் அடைந்த வள்ளியம்மா மற்றும் தாக்குதலில் காயம் அடைந்த ஷைனி ஆகியோர் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக ஷைனி கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் லாரன்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி