கொல்லங்கோடு அருகே டெம்போ, பைக், ஆட்டோ மோதல் 2 பேர் படுகாயம்

7833பார்த்தது
கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் சசி. இவர் கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். சசி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஊரம்பு பகுதிக்கு சென்று விட்டு, சூழால் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த ஒரு டெம்போ திடீரென சசியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, எதிரே வந்த ஒரு பயணிகள் ஆடோ  மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து ஆட்டோ டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதில் பயணம் செய்த பெண் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சசி ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனே காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தப் பெண்ணை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், சசியை பாறசாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே விபத்தில் சிக்கிய ஆட்டோ கவிழ்ந்த போது சாலையோரம் நின்ற முதியவர் ஒருவர் நூல் இழையில் உயிர் தப்பியதும், விபத்துக்கு காரணமான டெம்போ டிரைவர் அங்கு நின்று பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்வதும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த காட்சிகள் தற்போது சமூக வலை தளத்தில் வெளியாகியுள்ளது.   விபத்து குறித்து கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி