சுசீந்திரம் அருகே தோழி வீட்டுக்கு சென்ற பெண் மாயம்

4474பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் அம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தழகு (வயது26), குளத்தில் பூப்பறிக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சுஷ்மிதா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், 9 மாத மகளும் உள்ளனர். சம்பவத்தன்று முத்தழகு குளத்தில் தாமரைப்பூ பறிக்க சென்றார்.

அப்போது சுஷ்மிதா தனது 2 குழந்தைகளையும் மாமியாரிடம் விட்டு விட்டு இறச்சகுளத்தில் உள்ள தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து முத்தழகு கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான சுஷ்மிதாவை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி