கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சார்ந்தவர் திருமாவேந்தன். இவர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளராகயுள்ளார். இந்த நிலையில் திருட்டு மது விற்பனை வழக்கில் இவர் உட்பட இரண்டு பேரை இன்று அஞ்சுகிராமம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 245 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டு மது விற்பனை வழக்கில்
அரசியல் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டது மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.