கண்டாங்கி பட்டுடுத்தி புறப்பட்டார் கள்ளழகர்

68பார்த்தது
கண்டாங்கி பட்டுடுத்தி புறப்பட்டார் கள்ளழகர்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார். இன்று அழகர் மலையை விட்டு புறப்படும் கள்ளழகருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்ப்பளித்து அவரை வணங்கி வரவேற்கின்றனர். தொடர்ந்து காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்புசாமி சன்னதியின் உத்தரவு பெற்று மதுரை நோக்கி கள்ளழகர் தங்க பல்லக்கில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நேர் கம்பி ஏந்தி புறப்பட்டார்.

தொடர்புடைய செய்தி