வெயில் கொடுமையால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

25447பார்த்தது
வெயில் கொடுமையால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சரோஜ் மாலிக் - சபிதா தம்பதி 2 குழந்தைகளுடன் ஈரோடு மாவட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். ஈரோட்டில் வெயில் அதிகமாக உள்ளதால் வயிற்று வலியால் அவதிப்பட்ட சபிதா சொந்த ஊருக்கு செல்லலாம் என கணவரிடம் கூறி வந்தார். நேற்றிரவு அவர் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். சரோஜ் கதவை உடைத்து பார்த்த போது மனைவி தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.