உத்திரமேரூர் ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நல சங்க கூட்டம்.

60பார்த்தது
தமிழ்நாடு ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் அரசாங்க 24 ஆம் ஆண்டு துவக்க விழா உத்திரமேரூரில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீ சக்தி திருமண மண்டபத்தில் உத்திரமேரூர் ஒன்றிய தமிழ்நாடு ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நல சங்கத்தின் 24 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. அந்த சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர் எம். முருகானந்தம் தலைமையிலும், உத்திரமேரூர் ஒன்றிய தலைவர் சரவணகுமார், ஒன்று செயலாளர் பிரபு, ஒன்றிய பொருளாளர் ராஜேஷ், ஒன்றிய காப்பாளர் குணால் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தின் மாநில செயலாளர் ரங்கநாதன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் நாவலன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திலீப் குமார், மாவட்ட பொருளாளர் பிரபாகரன், மாவட்ட காப்பாளர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இதில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த சங்கத்தின் காலண்டர் வழங்கப்பட்டது. இதில் அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி