சொகுசு காரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
கடந்த 31 ஆம் தேதி பால்நல்லூர் பகுதியில் ஸ்கார்பியோ காரில் வந்த 3 பேர் முகவரி கேட்பது போல நடித்து ராஜேந்திரன் என்பவரிடம் 15000 பணம் மற்றும் புதிய செல்போனை வழிப்பறி செய்து காரில் தப்பி சென்றுள்ளனர்
இது குறித்த புகாரின் பேரில் மதுரவாயல் அருகே ஸ்கார்பியோ கார் பிடிபட்ட நிலையில் ஓட்டுனரை விசாரித்ததில் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஜோசப் ஆல்வா எடிசன் (33)
ஸ்டாலின் (21) சரத் (26) ஆகிய 3 பேரை கைது செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் காரை பறிமுதல் செய்துடன் வழிப்பறி செய்த 15000 ரொக்கம் மற்றும் புதிய செல்போனையும் பறிமுதல் செய்தனர்
3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.