தொடர் மின்வெட்டை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

78பார்த்தது
சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் முன் அறிவிப்பு இல்லாமல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென திருச்சி சென்னை தேர் திருவிழா சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது

குறிப்பாககூடுவாஞ்சேரி மகாலட்சுமிநகர், சத்யசாய்நகர், அம்பாள்நகர், விஷ்ணுபிரியாநகர், நெல்லிகும்பம் சாலை , கன்னிவாக்கம், ஆதனூர் ஆகிய பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையான கடும் சிரமத்திற்கு உள்ளாகிய வந்தனர் அதேபோல சிறுவர்களும் முதியவர்களும் கடும் அவதி அடைந்தனர்
, அடிக்கடி இது போன்று தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும் கூடுவாஞ்சேரி அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த ரோந்து போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி