சாலையில் நீண்டுள்ள கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்

81பார்த்தது
சாலையில் நீண்டுள்ள கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்
காஞ்சிபுரம், டி. கே. நம்பி தெருவில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மேட்டு கம்மாள தெருவிற்கு செல்லும் சாலையின் குறுக்கே, மழைநீர் வடிகால்வாய் தளத்தில் சிமென்ட் பூச்சு கலவை பெயர்ந்துள்ளதால், அதில், உள்ள கம்பிகள் வெளியே நீண்டுள்ளது.

இதனால், நடந்து செல்லும் பாதசாரிகள் கம்பியில் இடித்துக்கொண்டு, காயமடையும் சூழல் உள்ளது. அதேபோல, இருசக்கர வாகனங்களும் பஞ்சர் ஆகும் நிலை உள்ளது.

எனவே, மழைநீர் கால்வாயின் தளத்தில் வெளியே தெரியும் கம்பிகள் மீது, கான்கிரீட் கலவை வாயிலாக சீரமைக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி