பள்ளி மாணவர்களுடன் காலை உணவு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்.

80பார்த்தது
பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்ட காஞ்சி மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி, வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள ஏகனாம்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்ட செயல்பாட்டினை காஞ்சி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார்.

உணவு நன்றாக இருக்கிறதா என்று பள்ளி மாணவர்களிடம் கேட்டரிந்தார். மேலும் பள்ளி வலாகத்தில் இருக்கும் சமயல் அறை, சிறு குழந்தைகள் கற்கும் (smart class) சிறிய வகுப்பறை, குடிநீர் தொட்டி, மற்றும் கழிவறைகள் போன்றவைகளை ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் , பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி