மனைவி கள்ள காதல் விவகாரத்தில் கணவன் தற்கொலை

1883பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்து பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகன் ராம்குமார் (வயது 30) இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 25 வயதுடைய பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

தம்பதி இருவருக்கும் ஐந்து வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இவர்களது காதல் திருமணத்தை அதே பகுதியை சேர்ந்த ராம்குமாரின் நண்பர் குறளரசன் (வயது 30) முன் நின்று செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் குறள அரசனுக்கும் ராம்குமாரின் மனைவிக்கும் இடையே கள்ள காதல் மலர்ந்துள்ளது. இது அரசபுறசலாக ராம்குமாருக்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் குறளரசன் மற்றும் ராம்குமாரின் மனைவி இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பதிவிட்டுள்ளார் குறளரசன். இதைப் பார்த்து ராம்குமார் அதிர்ந்து போய் உள்ளார்.

உடனே வீட்டிற்குச் சென்று மனைவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். மனைவி முறையாக பதில் சொல்லாததால். ஆத்திரமடைந்த ராம்குமார் குறளரசனை தேடிச் சென்று அவரிடம் இதுகுறித்து நியாயம் கேட்டுள்ளார் அப்போது அவரை குரலரசன் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனம் முடைந்த ராம்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி