ரூ. 80 கோடி மதிப்பு கோவில் இடம் மீட்பு

55பார்த்தது
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ. 80 கோடி மதிப்பு கோவில் இடம் மீட்பு,

செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் பேரூராட்சி, இ. சி. ஆர். , நெம்மேலி செல்லும் சாலை அருகே கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான, சர்வே எண் 225 ல் 5 ஏக்கர், 161/ 7 ல், 13. 44 ஏக்கர் என மொத்தம் 18. 44 ஏக்கர் நிலத்தை, சிலர் ஆக்கிரமித்து அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தெரிந்தது,

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் ஊழியர்கள், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு, கோவிலுக்கு சொந்தமான இடம் எனவும் ஆக்கிரமிப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிப்பு பலகை வைத்தனர்,

மேலும், ஜே. சி. பி. , இயந்திரம் வாயிலாக அந்த இடத்தில் இருந்த முற்செடிகளை அகற்றி தூய்மைபடுத்தி கோவில் கட்டுபாட்டில் கொண்டுவந்துள்ளனர்,

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, 80 கோடி ரூபாய் இருக்கும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்,.

தொடர்புடைய செய்தி