மர்மமான முறையில் இளம் பெண் மரணம்; உறவினர்கள் சாலை மறியல்

1526பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பட்டிக்காடு ஊராட்சி அச்சரவாக்கம் பகுதியில் வசிப்பவர் ரமேஷ் இவரது மனைவி ராஜி வயது 42. இவர் நான்கு நாட்களுக்கு முன்பு திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள வேதகிரிஸ்வரர் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு அன்று இரவு வீட்டிற்கு வராததால் காணாமல் போனவரை கண்டுபிடித்து தருமாறு திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து நேற்று புலியூர் கிராம ஏரி கரையில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடப்பதாக தகவல் வந்ததை அடுத்து திருக்கழுக்குன்றம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என காவல்துறை மீது குற்றச்சாட்டு வைத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலையில் உள்ள இரண்டு மதுபான கடையை அகற்றக்கோரியும் திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிகமாக இருப்பதால் இறந்த பெண்மணி பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த ஊர் மக்கள் இதுவரை குற்றவாளியை கண்டு பிடிக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கொத்திமங்கலம் நான்கு வழி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி