ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

63பார்த்தது
திருக்கழுக்குன்றம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் உள்ளது பழமை வாய்ந்த கோவிலை ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் புணரமைத்து புதிதாக மண்டபம் மற்றும் நவகிரக சன்னிதானம் அமைத்து கும்பாபிஷேகம் செய்திட ஊர் மக்கள் முடிவு செய்து திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகத்திற்கு தயாரானதை தொடர்ந்து கணபதி பூஜை கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு வேள்விகள் துவங்கிய நிலையில் நேற்றைய தினம் இரண்டாம் காலயாக பூஜை முடிந்து மூன்றாம் காலயாக பூஜை என பல்வேறு வேள்விகள் முடிவுற்று இன்று காலை யாக சாலையில் உள்ள புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியாருடன் திருக்கோயில் நிர்வாகிகள் கொண்டு சென்று கோபுர விமானத்திற்கும் மூலவ அம்பாளுக்கும் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி