படாளம் பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா

83பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட படாளம் பேருந்து நிலையம் அருகாமையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியை மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வையாவூர் வி. ஜி. குமரன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், இவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், வெள்ளரிக்காய், நீர்மோர், பழச்சாறுகள், பணம் நுங்கு, குளிர்பானங்கள், பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவசலம், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் செல்ல பாண்டியன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி