மது அருந்தும் போது மோதல் ஐ. டி ஊழியரை கத்தியால் வெட்டி கொலை

563பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் இரவ் கேட்ரிங் வேலை செய்து வருகின்றார். (52), இவரது மகன் விக்னேஷ் (26) இவர் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஐ. டி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.

தனது மகன் கடந்த 11 ஆம் தேதி இரவு 11 மணிக்கு காணவில்லை எங்கு தேடியும் விக்னேஷ் வீடு திரும்பாத காரணத்தினால் விக்னேஷ் தந்தை தங்கராஜ் கடந்த 15 ஆம் தேதி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் தனது மகன் காணவில்லை என விக்னேஷ் புகைபடத்துடன் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதல் கட்ட விசாரணையில் விக்னேஷ் தனது நண்பர்களுடன் மறைமலைநகர் அருகே கோகுலபுரம் ஏரியில் நான்கு பேர் மது அருந்தும் போது விக்னேஷை கத்தியால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி