தண்ணீரில் முழங்கிய ரயில்வே சுரங்கப்பாதை

78பார்த்தது
கூடுவாஞ்சேரி ரயில்வே சுரங்கபாதை மழை தண்ணீரில் மூழ்கியது தண்ணீரை அகற்றும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னல்களுடன் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கொட்டி தீர்த்த கன மழையால் ரயில்வே சுரங்கபாதை மழை தண்ணீரில் மூழ்கியது சுமார் 2 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ரயில்வே சுரங்கபாதையை கடந்த செல்ல முடியாத நிலை உருவாகியது

இதனால் கூடுவாஞ்சேரியில் இருந்து ஆதனூர், மாடப்பாக்கம் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர் இதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி நகராட்சி ஊழியகள் ரயில்வே சுரங்கபாதையில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டர் பொருத்தி தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை காலம் துவங்குவதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி