நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது

72பார்த்தது
நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார்பகுதியில், நடிகை கவுத மிக்கு சொந்தமான, பல ஏக்கர் நிலம் இருந்தது.

இதை விற்க, சென்னையைச் சேர்ந்த அழகப்பன், 64, என்பவருக்கு, கவுதமி 'பவர்' பத்திரம் எழுதிக் கொடுத்தார்.

இந்நிலையில், கவுதமியின் சொத்துகளைமோசடியாக விற்பனை செய்து, 25 கோடி ரூபாய் ஏமாற்றியதாக அழகப்பன், அவரதுமனைவி நாச்சாள் உள்ளிட்ட 5 பேர், ஏற்கனவேசென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின், ஜாமினில் வெளிவந்த அழகப்பன் தலை மறைவானார்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் கவுதமியின் அண்ணன் ஸ்ரீகாந்த் என்பவரின் சொத்தையும் அழகப்பன் மோசடிசெய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், தன் அண்ணன் சார்பில் கவுதமி, கடந்த மே மாதம் புகார் அளித்தார்.

புகாரில், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில், என் அண்ணனுக்கு சேர வேண்டிய 1. 26 ஏக்கர் நிலம் இருந்தது.

இதை விற்க, கடந்த 2015ல் அழகப்பனுக்குஅதிகார பத்திரம்எழுதிக் கொடுத்தார். அந்த நிலத்தை, 60 லட்சம்ரூபாய்க்கு விற்ற அழகப்பன், பணத்தைதரவில்லை. சில மாதங்கள் கழித்து, இதே நிலத்தை, 1. 63 கோடி ரூபாய்க்கு, கூட்டாளி ரகுநாதன் என்பவருக்கு அழகப்பன்விற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி