புதிய பேருந்து நிலையம் கட்டிடம் திறப்பு விழா

71பார்த்தது
பூதூர் கிராமத்தில் ஊராட்சி நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி காஞ்சிபுரம் எம். பி. செல்வம் பங்கேற்பு


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூதூர் கிராமத்தில் ஊராட்சி நிதியிலிருந்து ரூபாய் 5. 50 லட்சம் மதிப்பிற்கு புதிய பேருந்து நிலைய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த புதிய பேருந்து நிலையத்தை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், ஒன்றிய கழகச் செயலாளர் படாளம் சத்யசாய் ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணியாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கள்ளபிரான்புறம், வையாவூர் ஆகிய ஊராட்சிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது திமுகவினர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, திமுக நிர்வாகிகள் வையாவூர் ஏழுமலை, தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி