தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

69பார்த்தது
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சனி ஞாயிறு வார விடுமுறை மற்றும் இன்று பக்ரீத் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை எதிரொலியாக சென்னையில் வசித்து வந்த தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர்.

இந்நிலையில் நாளை முதல் பள்ளி கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி வருவதால் செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதிகப்படியான வாகனங்களின் வரத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக சிங்கபெருமாள் கோயில் முதல் மகேந்திரா சிட்டி வரை சுமார் 2கிலோ மீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது உள்ளது

நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி