போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

63பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர் இணைந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பொலம்பாக்கமதில்

இன்று காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்பதால் நல்ல செயல்கள் பள்ளியில் இருந்தே பிறக்கின்றது என்பதால் சித்தாமூர் காவல்துறையினர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்களை கொண்டு போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி பொலம்பாக்கம் பள்ளியில் இருந்து சித்தாமூர் முக்கிய வீதிகள் வழியாக

போதிய ஒழிப்போம் நல்ல பாதியை வகுப்போம்!

புகையிலை நமக்கு பகையிலை!

போதையை தவிர்ப்போம் புது உலகை படைப்போம்.

என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் ஏந்தி காவல் துறையுடன் இணைந்து பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

அதனை தொடர்ந்து கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காவல்துறையினர் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி என போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி