இருசக்கர வாகனம் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்து

52பார்த்தது
இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி மேலே இருந்து கீழே விழுந்து கைகால் முறிவு.

அடிபட்ட வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன் வயது (19) மற்றும் அவரது நண்பர் மாடம்பாக்கம் பகுதியில் தனது நண்பர் வீட்டிற்கு வந்துவிட்டு திரும்பி உத்திரமேரருக்கு சென்று கொண்டிருந்தனர்

அப்போது கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் கூடுவாஞ்சேரியை இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த போது சசிதரன் கட்டுப்பாட்டை இழந்து ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் வாகனத்தை மோதி மேலிருந்து கீழே விழுந்தால்

அப்போது அவருக்கு கை கால் முறிவு ஏற்பட்டது உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பின்பு விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி