மனித உரிமைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பு சார்பாக முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் விருது வழங்கும் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் மனித உரிமைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பு சார்பாக முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் சமூகத்தில் சிறந்து விளங்கிய 10 அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு அமைப்புகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கங்களின் மாநில செய்தி தொடர்பாளர் சிங்கை கணேஷ், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு பார் பிடரேஷன் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் சசிகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.