பெயர்த்து மூன்று மாதமாகியும் சாலை அமைக்காததால் ஆபத்து

64பார்த்தது
பெயர்த்து மூன்று மாதமாகியும் சாலை அமைக்காததால் ஆபத்து
மறைமலை நகர் கீழ்க்கரணை ஹவுசிங் போர்டு பிரதான சாலையில், தினமும் நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

மூன்று மாதங்களுக்கு முன், புதிய சாலை அமைக்க பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. இது வரை புதிய சாலை அமைக்கப்படாததால், இரவில் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.

எனவே, இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி