மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

76பார்த்தது
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஒப்படைக்கும் போராட்டம்

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் வில்சன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர்

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகள் தமிழகம் முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனே வழங்கு, 100 நாள் வேலை சட்ட விதிகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையை உடனே வழங்கு, மாதம் 35 கிலோ அரிசிக்கு AAY கார்டு சட்டப்படி வழங்க கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி