மதுராந்தகம் தொகுதியில் அதிமுக அடையாள அட்டை வழங்கிய எம்எல்ஏ

54பார்த்தது
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக அடையாள அட்டை வழங்கிய எம்எல்ஏ
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் நீர்ப்பெயர், நல்லூர், இரும்பேடு ஊராட்சிகளில் அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டு எனப்படும் புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப். 18) நடைபெற்றது.இதில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார்.

தொடர்ந்து நேத்தப்பாக்கம் கிராமத்தில் முத்துக்குமார் - யசோதா தம்பதியரின் வீடு மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததை அறிந்து அங்கு சென்றார். தீயில் எரிந்த வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய சேர்மன் கீதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி