செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட தொடக்கபள்ளி ஆசிரியர்கள் இடம் மாறுதல்களந்தாய்வு கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது
இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நின்னகரை பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஐந்து ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் தற்போது நான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்து வருகின்றனர் அதற்கான காலியிடம் என நேற்று வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கலந்தாய்வுக் கூட்டத்திற்கு வந்த போது ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது
அப்படி ஒரு இடம் இல்லை என்று கணினியில் காண்பிக்காத மறைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டத்தை நிறுத்தி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு மீண்டும் காலியான இடத்தை அறிவிக்கும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர் இதன் காரணமாக உடனடியாக அந்த இடம் காலியாக உள்ளதாக அறிவிப்போம் என்று வட்டார கல்வி அலுவலர் தெரிவித்தது அடுத்து ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு காத்து கிடக்கின்றனர்.