வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வதில் தாமதம்

52பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சியில் வாக்குச்சாவடி எண் 194 - லில் 996 வாக்குகள் உள்ளன.

இந்த வாக்கு சாவடியில் மதியம் 3 மணி மேல் ஒட்டுப் பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குகள் பதிவு செய்ததில் தாமதம் ஆகிறது.

இதனால் மதியம் 3. 00 மணிக்கு ஆண், பெண் என தனித்தனி வரிசையில் 300 -க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரத்திற்கு காத்திருந்தனர்.

இதனால் இந்த வாக்கு பதிவு மையத்தில் காத்திருந்த பொது மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி