புதியமதுபான கடைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

83பார்த்தது
மறைமலைநகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான கடைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு புதிதாக அரசு மதுபான கடை திறக்கட்டுள்ளனர்

புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடைக்கு அருகே குடியிருப்புகள், கோவில்கள், தேவாலையங்கள், பள்ளி என 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மதுபான கடையை திறக்க கூடாது என மறைமலைநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கியுள்ளனர்

இந்த நிலையில் மறைமலைநகர் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக மதுபான கடைக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழக அரசும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் மறைமலைநகர் பகுதியில் ஏற்கனவே இரண்டு அரசு மதுபான கடைகள் உள்ள நிலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும், தமிழகத்தில் படி படியாக மதுபான கடைகளை மூட வேண்டும், இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்ற வாசகங்கள் இந்த போஸ்டரில் எழுதபட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி