சிற்பம் வட்டார களஞ்சியத்தின் 25 ஆம் ஆண்டு தொடக்க விழா

82பார்த்தது
சிற்பம் வட்டார களஞ்சியத்தின் 25 ஆம் ஆண்டு தொடக்க விழாவுடன் 19 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 750க்கும் மேற்பட்ட களஞ்சிய சுய உதவிக் குழு பெண்கள் பங்கேற்பு.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மண்டலம் சிற்பம் வட்டார களஞ்சியத்தின் 25 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 19 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 5312 களஞ்சிய சுய உதவிக் குழு பெண்கள் ஒன்றிணைந்து சிற்பம் வட்டார களஞ்சியம் எனும் மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்கள் தங்களது வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற அடிப்படையில் அனைவருக்கும் தரமான கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், சிறு தொழில் புரிய வங்கி கடன் என மக்களுக்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறது

களஞ்சியத்தின் இரு பெரும் விழாவை வட்டார பொறுப்பாளர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
விழாவின் நோக்கத்தை குறித்து மண்டல ஒருங்கிணைப்பாளர் மணிபாரதி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் கனரா வங்கி மண்டல மேலாளர் சதீஷ்குமார், இந்தியன் வங்கி கிளை மேலாளர் பாலச்சந்தர் மற்றும் கனரா வங்கி திருக்கழுக்குன்றம் கிளை மேலாளர் மணிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி