அதிக பாரங்களுடன் வந்த லாரிகளுக்கு அபராதம் விதித்த போலீசார்

60பார்த்தது
அதிக பாரத்துடன் கல் மண் ஏற்றி வந்த 25 லாரிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் மேல்மருவத்தூர் போலீசார் அதிரடி நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூரிலிருந்து சோத்துப்பாக்கம் வழியாக தினம்தோறும் தனியார் கல் மற்றும் மணல் குவாரிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மண் கல் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகிறது.
அதனால் அந்த சாலைப் பகுதியில் உள்ள முகுந்தகிரி, கொளம்பாக்கம், மழுவங்கறனை, பொறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கல் மற்றும் மண் குவாரிகளில் இருந்து வரும் லாரியால் தொடர்ந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன அதன் அடிப்படையில் இன்று மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் அதிக பாரத்துடன் மண் மற்றும் கல் ஏற்றி வந்த 25க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு தல ரூபாய் 60 ஆயிரம் வீதம் மொத்தமாக 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி