திமுக வேட்பாளருக்கு மல்லிப்பூவால் அபிஷேகம் வரவேற்பு

1927பார்த்தது
திருக்கழுக்குன்றம் அருகே திமுக வேட்பாளருக்கு மல்லிப்பூவால் அபிஷேகம் செய்த மணப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மேலரிப்பாக்கம், மணப்பாக்கம், ஆனூர், பிவி களத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க வருகை தந்த வேட்பாளருக்கு மணப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித் குமார் தலைமையில் பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து வேட்பாளரை மல்லி பூவால் அபிஷேகம் செய்து பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது திருக்கழுக்குன்றம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர் டி அரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, துணைப் பெரும் தலைவர் பச்சையப்பன், பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி