சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

79பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பழத்தோட்டம் பகுதியில் செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசார் மற்றும் பாலூர் களால் பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் மடக்கி விசாரணை நடத்திய போது அந்த விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது

சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரின் இருசக்கர வாகனத்தை சோதனை இட்டபோது அதில் 2 கிலோ கஞ்சா மறைத்து இருந்ததை கண்டுபிடித்தனர் அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது கல்பாக்கம் ஜங்ஷனுக்கு வந்த ஒரு பெண் ஒரு இளைஞரிடம் ஒரு பையை கொடுத்துள்ளார் அப்பொழுது போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்துள்ளனர் அந்த விசாரணையில் 6 கிலோ கஞ்சாவை கொண்டு வந்த அந்த பெண் சென்னை செனாய் நகரை சேர்ந்த சுதாகரன் என்பவரது மனைவி சூர்யா 30 என்பதும் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட 6 கிலோ கஞ்சா குடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 24 என்பவரிடம் ஒப்படைக்க வந்ததாக சூர்யா கூறியுள்ளார் அதன் அடிப்படையில் மொத்தம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சரவணன் பாலகிருஷ்ணன் மற்றும் சூர்யா என்கிற பெண் உட்பட 3 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆசிரியர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி