தெரு நாய்கள் கடித்து 2 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

85பார்த்தது
அச்சரப்பாக்கம் அருகே விண்ணம்பூண்டி கிராமத்தில் தெரு நாய் கடித்ததில் சிறுவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே விண்ணம்பூண்டி கிராமத்தில் தெரு நாய்கள் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் நாய்களால் தெருவில் பெண்கள், மூதாட்டிகள்,
சிறுவர், சிறுமிகள் தெருவில் நடந்து சொல்ல முடியாது நிலை உள்ளது. இந்த தெரு நாய் கூட்டத்தில் ஒரு சில நாய்களுக்கு வெறி பிடித்திருக்கிறது. அந்தப் பகுதியில் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்து உள்ளன. தற்போது நாய்களுக்கு அதிகமான வெறி பிடித்து உள்ளது. கிராமத்தில் சசிகுமார் சிவகாமி ஆகியோரின் மகன்கள் ஹரிஷ், சஞ்சய் என்ற சிறுவனை தெரு நாய் கடித்தன.

அங்கிருந்தவர்கள் சிறுவர்கள் இருவரையும் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒரத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விண்ணம்பூண்டி ஊராட்சியில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி