திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
செய்யூர் அருகே திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் இலத்தூர் வடக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குறித்து கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மேலும் திமுக ஆட்சியில் தான் போதைப் பொருள்கள் அதிக புழக்கம் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

கள்ளக்குறிச்சியில் கள்ள வியாபாரத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து வடக்கு ஒன்றிய செயலாளர் கோதண்டன் ஒருங்கிணைப்பிலும், தொகுதி செயலாளர் கிருபாகரன் தலைமையிலும் பவுஞ்சூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் மருத்துவர் மணிமாறன் மாவட்ட செயலாளர், சூசை ராஜ் மாவட்ட தலைவர், பாஸ்கரன் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர், சேகர் மதுராந்தகம் தொகுதி செயலாளர், ரவிசங்கர் சித்தாமூர் ஒன்றிய செயலாளர், மேகா திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் மற்றும் நாம் தமிழர் கட்சினர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி