செங்கல்பட்டில் பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

1081பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன் சத்யா என்கிற சீர்காழி சத்யா (41) இவர் மீது 6 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தேடப்படும் குற்றவாளியான சத்யா மகாபலிபுரம் பகுதியில் பிறந்தநாள் விழாவிற்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவரை கண்காணித்த போது அவர் மகாலிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு பழவேலி வழியாக சென்னை நோக்கி செல்லும் போது போலீசார் பின் தொடர்வதை கண்ட சத்யா பழவேலி மலைப்பகுதியில் தப்பித்து ஓட முயற்சித்துள்ளார். அவரை போலீஸார் சத்யாவின் காலில் சுட்டு பிடித்தனர். செங்கல்பட்டு டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி