புதிய நியாய விலைக் கட்டிடத் திறப்பு விழா

68பார்த்தது
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு- நிதியிலிருந்து ரூபாய்- 10 லட்சம் மதிப்பீட்டிலான புதிய நியாய விலைக் கட்டிடத் திறப்பு விழா!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட-1-வது வார்டு-காக்கநல்லூர் கிராமத்தில்,

கூட்டுறவு பண்டக சாலை பொது விநியோகத் திட்டத்தின் கீழ்- இப்பகுதியில் செயல்பட்டு வந்த
ரேஷன் கடைக்கான கட்டிடம் பழுதடைந்த நிலையில் கடந்த ஆண்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது!!

அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்- தொகுதி மேம்பாட்டு நிதியின்- கீழ்- 10- லட்சம் மதிப்பீட்டில்,
கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கட்டிடத்தை, திறந்து
அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்-க. சுந்தர் எம், எல், ஏ, -தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
காஞ்சிபுரம்-எம்பி கு. செல்வம்- பங்கேற்று ரேஷன் கடையினை திறந்து வைத்து உணவுப் பொருட்கள்
விற்பனையை துவக்கி வைத்தனர்.

நிகழ்வின் போது, உத்தரமேரூர் ஒன்றிய செயலாளர்-
கே. ஞானசேகரன், சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவர்-சசிகுமார், வார்டு கவுன்சிலர்- அறிவழகன்,
பேரூராட்சி அலுவலர்- ஜானி,
உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பேரூராட்சி பணியாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி