மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லுார் பகுதியைச் சேர்ந்த சேகர் மகள் அஸ்வினி, 19.
இவர், வேடந்தாங்கலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அவரின் பெற்றோர் நேற்று மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மதுராந்தகம் போலீசார், காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.