தேமுதிக சார்பில் மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம்.

73பார்த்தது
மதுராந்தகம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேமுதிக கட்சியில் காஞ்சிபுரம் புறநகர் மாவட்டக் கழக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது மாவட்டக் கழக அவைத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் மதுராந்தகம் நகர கழக செயலாளர் சாந்தகுமார் வரவேற்பு உரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கழக துணைச் செயலாளர் பார்த்தசாரதி , காஞ்சிபுரம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் எம் ராஜேந்திரன், இவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் அப்போது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது காஞ்சிபுரம் பகுதியில் கேப்டன் அவர்களுக்கு திருவுருவ சிலை அமைப்பது குறித்தும், வரவிருக்கும் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்தநாள் விழாவை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும் செப்டம்பர் 14ஆம் தேதி தேமுதிக கட்சி தொடங்கி இருபதாம் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடுவது குறித்தும் வரவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது குறித்தும் புதிய நிர்வாகிகள் கட்சியில் இணைப்பது குறித்து
இந்த திமுக ஆட்சியில் திருநற்ற ஆட்சி நடைபெற்று வருவது அது குறித்து பொதுமக்களிடையே கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்வது குறித்தும் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி