கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது

1908பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வேட்டைக்கார குப்பம் பகுதியைச் சேர்ந்த 31-வயது உடைய மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை தாயார் குளிப்பாட்டி உள்ளார்.

அப்பொழுது உடம்பில் பல்வேறு பகுதிகளில் காயம் இருந்துள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ன.உடனடியாக பெண்ணின் அண்ணன் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட செய்யூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி, தினேஷ், விக்கி ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.

இதில் போலீசார் விசாரணையில் 4 இளைஞர்கள் ஒன்றிணைந்து பெண்ணை ஏமாற்றி ஏரிக்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் செய்ததாக ஒப்புக்கொண்டு உள்ளனர்.

இதை அடுத்து போலீசார 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மூன்று பேரையும் செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், முக்கிய குற்றவாளியான கார்த்தி என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மதுபோதையில் இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி