தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது

79பார்த்தது
மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது அவரிடமிருந்து 40 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்து சிறையில் அடைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வினோத் என்பவனை கைது செய்து விசாரணை செய்ததில் மதுராந்தகம் சித்தாமூர் மேல்மருவத்தூர் கீழ்க்கொடுங்காலூர் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அவனிடமிருந்து 40 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணம் பறிமுதல் செய்து காவல்துறையினர் திருடனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி