திமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

71பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிராமத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜி. செல்வம் அவர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் எம். எஸ். பாபு தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, கழகச் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். டி. அரசு, ஒன்றிய கழக செயலாளர்கள் சிற்றரசு, பொன் சிவக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுக்த அய்யனார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி