குடிக்க சென்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் குத்திக் கொலை

573பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா முத்தியால்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த ஏரிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ் இவரது மகன் கனக சபாபதி வயது 24 எல்லை பாதுகாப்பு படை வீரராக இமாச்சல் பிரதேசம் டார்ஜிலிங் பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.

40 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கனகசபாபதி தனது உறவினர் விட்டு திருமணத்திற்காக நண்பர் ஆனந்தராஜ் என்பவர் உடன் இரு சக்கர வாகனத்தில் தாம்பரத்திற்கு சென்று திரும்பி வந்துள்ளார்.

திருமணத்திற்கு சென்று விட்டு வந்த வழியில் ஊத்துக்காடு டாஸ்மாக் கடையில் மது குடிக்க நண்பர்கள் இருவரும் சென்று உள்ளனர்.

மதுபானம் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறிய நிலையில் நண்பர்கள் இருவரும் அங்கிருந்த ஒருவரை தாக்கியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கனக சபாபதி ஆனந்த ராஜ் ஆகிய இருவருடன் அடிதடி தகராறு ஈடுபட்டு உள்ளனர்.அடிதடி தகராறு கனகசபாபதிக்கு கத்தி குத்து விழுந்து உள்ளது.

அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர் கனகசபாபதி ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி