ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 76 மாணவர்கள் சாதனை

622பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் நவம்பர் டிசம்பர் 2023 ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய செமஸ்டர் தேர்வில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 76 மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் ராஜ ராஜேஸ்வரி என்ற மாணவி 98 % மதிப்பெண் பெற்று கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றார். இந்த தேர்வுகளில் 90% மேல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் தாளாளர் கோ. ப. செந்தில்குமார் அவர்கள் பாராட்டுச் சான்றிதழை வழங்கி நினைவு பரிசுகளை வழங்கினார். இந்தத் தேர்வில் கல்லூரி அளவில் முதல் 10 இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து கல்லூரி தாளாளர் கோ. ப. செந்தில்குமார் அவர்கள் விளக்கு அளித்துள்ளார்.
மேலும் டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவர்களுக்கான மாநாட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் தலைமையில் மாணவர்கள் வணிக மாதிரியான ஈக்லெட் ட்ரோன் முதல் இடத்தை பிடித்த சான்றிதழ் கல்லூரி தாளாளரிடம் வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜா, டீன் ராமசாமி, நிர்வாக அதிகாரி சதானந்தம் மற்றும் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி