4-வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

77பார்த்தது
செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 4-வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு அடுத்த பழவேலி புறவழிச்சாலையில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பழவேலி பகுதியில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் நிறுவன பேருந்து ஒன்று சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தது. அதன் பின்னால் அடுத்தடுத்து ஆம்னி பேருந்து மற்றும் கார் ஆகியவை நின்றுள்ளன.

அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த லாரி காரின் பின்புறம் மோதியது. தொடர்ந்து அடுத்தடுத்து 4-வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 35-வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 7-வயது மதிக்கத்தக்க அவரது மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் யார்? விபத்துக்கான காரணம்? குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி